சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 14 அத்தியவசிய மருந்துகள் உள்ளிட்ட மருந்துகள் மற்றும் உபகரணங்களின் தொகுதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டுள்ளது.
மருந்துகள் மற்றும் உபகரணங்களின் மதிப்பு 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள். சீன அரசாங்கம் மற்றும் பல்வேறு பௌத்த அமைப்புகள் உட்பட நாட்டிலுள்ள பல்வேறு சமூக அமைப்புகளினால் இந்த மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹோங் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டு மருந்துகள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொண்டதாக கட்டுநாயக்க விமான நிலைய நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.