முட்டையின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை, கோழி இறைச்சி மற்றும் திரவ பால் கொள்வனவு படிப்படியாக குறைந்து வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மூலப்பொருட்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளமையே இந்த நிலைக்கு காரணம் என அதன் செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
முட்டை, கோழி இறைச்சி, திரவப் பால் போன்றவற்றின் நுகர்வு படிப்படியாகக் குறைவடைந்துள்ள நிலையில், சத்துணவு தொடர்பில் மற்றுமொரு சிக்கல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறார்களுக்கு சரியான போஷாக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நெத் நியூஸிடம் கருத்து தெரிவித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய, குழந்தைகளின் போஷாக்கை முடிந்தவரை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.