தபால் கட்டணத்தை உடனடியாக திருத்தம் செய்ய தபால் திணைக்களம் கருவூலத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் தபால் திணைக்களத்தை நடத்துவது கடினமாகும் என தபால் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
காகித தட்டுப்பாடு காரணமாக தபால் திணைக்களத்திற்கு வங்கிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் இருந்து பெறப்படும் கடிதங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நஷ்டத்தைக் குறைக்க தபால் திணைக்களத்தை வாரத்தில் ஒரு நாள் மூடவும் அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.