தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டீசல் வழங்கவில்லை இதனால் நாளை (06) முழுமையாக பஸ்கள் சேவையில் ஈடுபடாத பல பகுதிகள் தொடர்பில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
தென் மாகாணம், கம்பஹா மாவட்டம், மன்னனாராம, வவுனியா, கேகாலை, மாவனல்லை, பொலன்னறுவை, பதுளை மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாது என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
“புள்ளிவிவரப்படி நாளை 10% முதல் 15% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். இந்த பகுதிகள் SLTB டிப்போக்களால் டீசல் வழங்கப்படாத பகுதிகளாகும். இப்பகுதிகளில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக டீசல் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மின்சக்தி அமைச்சருக்கும் உள்ளது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன். ஏனெனில் பொதுப் போக்குவரத்துச் சேவை செய்ய வேண்டியதைச் செய்யவில்லை. இந்த எரிபொருள் கட்டுப்பாடு குறித்து அமைச்சர்களும் சற்றே மௌனம் சாதிப்பதைக் காண்கிறோம்.எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.