இலங்கைக்கான ஏர்ஃப்ளோட் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதனை மீளமைக்க தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குரிய ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த விமானத்தை ஆரம்பிக்குமாறு ஏரோஃப்ளோட் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையிடம் கோரியிருந்தால் அதனை வழங்கியிருக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.