தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
தங்காலை மொட்டகடியார பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கடந்த 72 மணி நேரத்தில் 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 4 பேர் பலியாகியுள்ளனர்.