இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தமது நிறுவனம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிடம் யோசனை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இலங்கை மின்சார சபையின் நட்டத்தை குறைப்பதற்கு நியாயமான சதவீதத்தினால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்.