ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூட்டியுள்ளார்.
அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.