ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி பல மாதங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் எஞ்சிய இரண்டு வருட பதவியை முடித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ப்ளூம்பேர்க்கிற்கு வழங்கிய நேர்காணலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த நிதி நெருக்கடியை தீர்ப்பதில் கவனம் செலுத்துவதால், தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
“தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியை என்னால் இராஜினாமா செய்ய முடியாது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேர்காணலில் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கெதிரான மக்கள் எதிர்ப்பின் பின்னர் ஜனாதிபதி வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய முதலாவது நேர்காணல் இதுவாகும்.
ஐந்தாண்டுகள் பதவியில் இருந்த நான், மீண்டும் போட்டியிட மாட்டேன்,” என்றார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரச ஊழியர்களுக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ எவ்வித வெட்டுக்களையும் ஏற்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னரோ அல்லது ஒரு வருடத்திற்கோ சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றிருந்தால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும்.