சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகன் மற்றும் அவரது மனைவியை வீரகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெதிகம நுழைவாயிலில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.