மகா பருவத்தில் மகசூல் கிடைக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மஹா பருவத்திற்கு தேவையான அனைத்து இரசாயன உரங்களும் வழங்கப்படும் எனவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் 65000 மெற்றிக் தொன் யூரியா யால பருவத்திற்கு சலுகை விலையில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளை இறக்குமதி செய்வதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு, சேதன உரம் தேவைப்படுபவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.