இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இலங்கை இராணுவத்தின் 60வது தலைமை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இதற்கு முன்னர் பிரதிப் பாதுகாப்புப் படைத் தளபதி, யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் இராணுவ காலாட்படைத் தளபதி உட்பட பல உயர் பதவிகளை வகித்துள்ளார்.