நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜியோர்ஜியோ ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடினேன்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்யுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் முடிவிலேயே நிதி உறவுப் பேச்சுக்கள் தங்கியிருப்பதாக பிரதமர் விளக்கினார்.
இந்த கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.