ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக, இலங்கையின் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல்கள்தெரிவிக்கின்றன.
பெசில் ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் ஏற்படும் வெற்றிடத்துக்கு அவர் நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
வர்த்தகர் தம்மிக்க பெரேரா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளதாக எமது செய்திப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.