மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் கண்டிப்பாகக் கொண்டுவரப்படும் என்றும், இந்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொறியியலாளர்கள் குழுவொன்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, மின்சார சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் சகல கடமைகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படலாம் என சில மின் பொறியியலாளர்கள் அச்சுறுத்தும் கடிதங்களை கூட அனுப்பி வைத்துள்ளனர்.