சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கிடைக்கும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடனும் கலந்துரையாடியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கும் பிரதமர் பதிலளித்தார்.
அதன் பின்னர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி விவாதத்தில் கலந்துகொண்டார்.
நாட்டில் நட்டமடைந்து வரும் நிறுவனங்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பின்வரும் கருத்துக்களையும் தெரிவித்தார்.