பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும், இன்று இரவு 8.00 மணிக்கு முன்னதாக முன்னாள் அமைச்சரை நீதிமன்றில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
அதுவரை அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நிறைவேற்ற வேண்டாம் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.