ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மின் பொறியியலாளர்கள் தமது பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, இன்று காலை முதல் தீவின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகத்தை சீரமைக்க பல மணித்தியாலங்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.