நாளை (10) முதல் முகமூடி அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாளை முதல் கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு உத்தியை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி சாதாரணமாக முகமூடிகளை அணியலாம் என சுகாதார பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.