சந்தையில் கோழிக்கறி மற்றும் முட்டையின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மக்காச்சோள தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் இந்த நிலைக்கு காரணம் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விற்பனை விலை 50 ரூபாய்க்கு அருகில் உள்ளது. ஒரு கிலோ கோழிக்கறி ரூ.1,200க்கு மேல் விற்பனையாகிவருகின்றமை முக்கிய விடையமாகும்.
மேலும், இவை இன்னும் அதிகரிக்க கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.