எதிர்பார்க்கப்படும் உணவு நெருக்கடியின் தாக்கம் எதிர்காலத்தில் கடுமையாக இருக்காது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது யாலா பருவத்தில் நெற்செய்கை எதிர்பார்த்த அளவை விட அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உலகளாவிய உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்து, இலங்கையில் அதன் தாக்கத்தை நிறுத்த முடியாது எனவும் அமைச்சர் கூறினார். ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என முன்னறிவிக்கப்பட்ட போதிலும், அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை அவ்வாறான நிலை நீங்கும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
எதிர்வரும் உணவு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு இதுவரையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானதா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.