ஒரு கிலோகிராம் உள்ளூர் வெள்ளை மற்றும் சிவப்பு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூபா 210 என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் இந்த உத்தரவு அமுலுக்கு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது டீலர் யாரும் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கவோ, வழங்கவோ, வர்த்தகம் செய்யவோ, காட்சிப்படுத்தவோ கூடாது வர்த்தமானியில் குறிப்பிடபட்டுள்ளது.