1 கிலோ 305 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வந்த சந்தேகநபர், போதைப்பொருளை நுட்பமான முறையில் தனது பயணப் பொதிகளில் அடைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் 46 வயதுடைய புத்தளத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.