கைவிடப்பட்ட அரச காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராணுவ தளபதி, உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இராணுவம் அதே காணிகளில் பயிர்ச்செய்கை செய்வதற்கான முன்னாயத்தங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
இராணுவத்தினரின் நலன்புரி நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.