எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரிவுகளாக பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு கல்வி அமைச்சுக்கு முன்மொழிந்துள்ளது.
நேற்று (10) பிற்பகல் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைதூரப் பகுதிகளில் இருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் இணைக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.