வங்கிகள் ஊடாக தமது வருமானத்தை அனுப்பும் புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு சுயதொழில் கடன் மற்றும் வீடமைப்புக் கடன்களை தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (BFE) தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் போது சம்பாதிக்கும் பணம் தொடர்பில் கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயங்களை நாட்டிற்குள் அனுப்புவது எதிர்பாராத பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் கீழ் ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கு அதிகளவான பணியாளர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் தென் கொரியாவுக்கு மட்டும் அனுப்பப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5,800 ஆகும்.