ஒரு வாரத்திற்குள் விலையை குறிப்பிடாமல், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த 150க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நெத் நியூஸ் வினவிய போது, கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்த 50க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரசபையின் நுகர்வோர் விவகார மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.