லிட்ரோ நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றும் முதித பீரிஸ்,நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்த விஜித் ஹேரத் அண்மையில் இராஜினாமா செய்தமையே இதற்குக் காரணம்.
இதேவேளை, தொடர்ந்து 6ஆவது நாளாக இன்றும் எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 8ஆம் திகதி இலங்கைக்கு வந்த எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பலுக்கு வழங்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியமையே அதற்குக் காரணம்.
இந்தக் கப்பல் இன்று உட்பட 6 நாட்கள் தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.