இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ பதவி விலகியுள்ளார்.
மின்சார சபையின் தலைவர் தனக்கு அனுப்பிய இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை மின்சார சபையின் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் என்ற ரீதியில் அவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.