பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாடுகளை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயனவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னைய சுற்றறிக்கைகளை அமுல்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை கருத்திற்கொண்டு கல்வியமைச்சு பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையை தயாரித்துள்ளது.