அத்தியாவசியமற்ற சேவைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் பஸ்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.