மொனராகலை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 50,000 ஏக்கர் காணிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக மழைக்காடு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
வத்தேகம கபிலித்த காப்புக்காட்டில் உள்ள காணிகளும் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் அவர்களது கூட்டாளிகளால் அபகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் அழைப்பாளர் ஜயந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வன திணைக்களம் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்த போதும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மழைக்காடு பாதுகாப்பு அமைப்பின் அழைப்பாளர் ஜயந்த விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.
கபிலித்த சரணாலயத்தில் காடழிப்பு தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இதற்கு முன்னர் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.