சீனாவினால் இலங்கைக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள முதலாவது அரிசி எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மில்லியன் ரென்மின்பி பெறுமதியான அரிசியின் முதல் தொகுதியை ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
இரண்டாவது தொகுதி அரிசியை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
சீனாவினால் வழங்கப்படும் உரிய அரிசி கையிருப்பு ஆறு தவணைகளாக இலங்கையை வந்தடையும். இதன்படி எஞ்சிய 04 பாகங்களும் பின்னர் இந்த நாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இலங்கை பாடசாலை உணவுத் திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10,000 மெற்றிக் தொன் அரிசி விநியோகிக்கப்படவுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.