நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்றத்தை பலப்படுத்தும் 21வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், தனது கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
21வது திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கூறியதாகவும் திரு காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை பலப்படுத்தும் திருத்தத்தை ஆதரிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பிரச்சினை இல்லை எனவும், ஆனால் நிறைவேற்று அதிகாரத்தை அதிகாரமற்ற பிரதமருக்கு மாற்றுவதை தவிர்க்க முடியாமல் தமது கட்சி எதிர்ப்பதாகவும் திரு
காரியவசம் மேலும் தெரிவித்தார்.