பாணந்துறை வெகட பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இன்று காலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். அவரது சடலம் பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தீவின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இன்று கிடைக்கும் பெட்ரோல் நிலையங்களின் பட்டியலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.