தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான உத்தேச வீதி வரைபடம் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போது தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்று அதற்கான பாதைவரைபடத்தை இறுதி செய்து நடைமுறைப்படுத்த நம்புவதாகவும் தெரிவித்தார்.
நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதனை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்குகள் குறித்து உரையாற்றினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அனர்த்தத்தை குறைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.