நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி இன்று நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படவுள்ளது.
அதாவது 75 நாட்களுக்கு. முன்னதாக பராமரிப்பு பணிகள் காரணமாக அனல்மின் நிலையத்தின் ஒரு பகுதி மூடப்படும் என இலங்கை மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் தேசிய மின் உற்பத்திக்கு 270 மெகாவோட் மின்சாரத்தை சேர்க்கும். நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு மற்றும் மழையின்மை காரணமாக ஏற்கனவே மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இன்று முதல் நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தின் ஒரு பகுதி மூடப்படவுள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மின்வெட்டு காலத்தை நீடிக்க வேண்டுமா என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கூறியபோது.
நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டில் மாற்றம் இல்லையென்றாலும் அடுத்த வாரம் முதல் மின்வெட்டை நீடிக்க முடியும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முடிவு நாளை அறிவிக்கப்பட உள்ளது.மேலும் பெறப்படும் எரிபொருளின் அளவை பொறுத்தே மின்வெட்டை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். மின்வெட்டை நீடிக்காமல் பராமரிக்க எரிபொருள் நிச்சயம் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நுரைச்சோலை அனல்மின் நிலையம் மூடப்படாவிடினும், அதனை பராமரிக்க மேலதிக டீசல் இருப்புக்கள் கிடைக்காவிடின் மேலும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை நீடிக்க நேரிடும் என மின் பொறியியலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் தெரிவித்தார். அதன்படி 04 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுலிலாகும் நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மின்வெட்டு நீடிக்கப்பட மாட்டாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றும் 2 மணிநேரம் 15 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.