தற்போதைய சூழ்நிலையில், பாடசாலை கல்வி ஆன்லைனில் நடாத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், போக்குவரத்து பிரச்சினை இல்லாத கிராமிய பாடசாலைகளில் கல்வியை நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படப்பிடுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வருடத்திற்கான ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படாமல் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பரீட்சை காலத்தில் மாத்திரமே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.