தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கும் மாணவர் விடுதிகளை உடனடியாக மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதிகளில் உள்ள மாணவர்கள் உடனடியாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்எனவும் குறிப்பிட்டுள்ளார்.