தற்போதைய சூழ் நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் சைக்கிள் பாவனை தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.
2022ஆம் ஆண்டில் இதுவரை 1,202 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவர்களில் 96 பேர் சைக்கிள் ஓட்டுநர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
எனவே துவிச்சக்கரவண்டிகளில் முகப்பு விளக்கு, பின்பக்க பிரதிபலிப்பு விளக்குகள் இல்லாதது, இரவு நேரங்களில் கருமை நிற ஆடைகளை அணிதல், போக்குவரத்து அடையாளங்களை பின்பற்றாமை, வீதியை கடக்கும்போது எதிரே வரும் வாகனங்களை கவனத்தில் கொள்ளாமை போன்ற விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் துவிச்சக்கர வண்டிகளை பரிசோதிக்க போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.