இந்த வருடத்தில் சுமார் 350,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களில் 60,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இத்தகைய கடவுச்சீட்டுகளை அவசர தேவையில்லாமல் பெற்றுக்கொள்ள இக்காலப்பகுதியில் விண்ணப்பிக்க வேண்டாம் என திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பிரியந்த ஹப்புஆராச்சி தெரிவித்தார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் கட்டுப்பாட்டாளர் பிரியந்த ஹப்புஆராச்சி இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போதைய சூழ்நிலையில் வீணாக விண்ணப்பித்து தேவையா மக்களினை சிரமத்திற்குள்ளாக்காமல் இருப்பதுவும் தற்போதைய நிலையில் பொதுமக்களாக மக்களுக்கு செய்யும் ஒரு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.