யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதி வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் தடைப்பட்டுள்ளது. எரிபொருள் கோரி வவுனியாவில் மக்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக இன்று காலை சுமார் 6.30 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எரிபொருள் போக்குவரத்து பௌசரை யாழ்ப்பாணத்திற்கு செல்ல விடாமல் போராட்டக்காரர்கள் வீதியை மறித்ததாகவும்,பொலிஸாரின் எதிர்ப்பினை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் எமக்கு அறியக்கிடைத்துள்ளது.