இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் குறித்து இந்திய நாடாளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடி நிலை மற்றும் அதனை சாதகமான சூழ்நிலையில் எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு குறித்து வெற்றிகரமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இக்கட்டான நேரத்தில் அண்டை நாடான இலங்கையுடன் ஒத்துழைக்க நாடாளுமன்ற ஆலோசனைக் குழு ஏகமனதாக ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.