பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக எதிர்வரும் 3-4 நாட்களுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அனைத்து பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 40,000 மெட்ரிக் தொன் TUL டீசல், 4,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 8,300 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பெற்றோல் கையிருப்பு அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் எனவும் லங்கா ஐஓசி தனது பெரும்பாலான பெற்றோல் இருப்புக்களை சந்தைக்கு வெளியிடுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்து பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்துமாறும் சாதாரண மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தனியார் துறை ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துமாறும், முடிந்தவரை வீட்டிலிருந்தே சேவைகளை ஆன்லைனில் மேற்கொள்ளுமாறும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.