2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பாடசாலைகளின் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளமையினால் ஆகஸ்ட் மாத விடுமுறைகள் முடிந்தவரை குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களில் குழந்தைகள் இழக்கும் பாடசாலை நாட்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஈடுசெய்யப்படும்.
ஆண்டு இறுதிக்குள் இழந்த கல்வியை மீண்டும் உருவாக்குவது எப்படி என்பது குறித்து ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கு பல நேரடி மற்றும் ஜூம் அமர்வுகள் ஏற்பாடு சேய்வதற்க்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.