தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வைத்தியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் முறையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி, தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் தமது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை நிரப்பு நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார சேவையில் ஈடுபடும் நபர்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு சமர்பிக்க சம்பந்தப்பட்ட திணைக்களம் அல்லது வைத்தியசாலைத் தலைவரினால் சான்றளிக்கப்பட்ட கடிதத்தை அனுப்புமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள திணைக்களம் அல்லது மருத்துவமனையின் பெயர், பணியாளரின் பெயர், பதவி, தேசிய அடையாள அட்டை எண், வாகனத்தின் பதிவு எண் மற்றும் வகை ஆகியவற்றைக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சுகாதார ஊழியர்களுக்கு கார்கள் மற்றும் SUV களுக்கு வாரத்திற்கு 40 லிட்டர் எரிபொருளும், முச்சக்கர வண்டிகளுக்கு 15 லிட்டர்களும், மோட்டார் சைக்கிள்களுக்கு 10 லிட்டர்களும் வழங்கப்படும்.
எரிபொருளை வழங்கும் பெட்ரோல் நிலையங்களின் பட்டியல் பின்வருமாறு: