ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது, அதன் பிறகு கூட்டம் நடைபெறும். எரிபொருள் நெருக்கடி காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்ட வரைவு குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 73ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.