சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீனா வாரத்திற்கு மூன்று விமானங்களை இலங்கைக்கு இயக்கவுள்ளதுடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அடிக்கடி சீனாவுக்குச் செல்ல முடியும்.
அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இலங்கைக்கான சீனத் தூதுவர் சி செங்கோங் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கல்வி கற்கும் இலங்கை மருத்துவ மாணவர்கள் மீண்டும் சீனாவில் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.
இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.