அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று (20) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதற்கு அங்கீகாரம் கிடைத்ததாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை முன்னெடுத்துச் சென்றமைக்காக பிரதமர் மற்றும் நீதி அமைச்சருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.