சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய செய்தியை வெளியிட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ், குற்றச்சாட்டை தொடர முடியாது என முன்னதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்படி அவரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
பொலிஸாரும் பிரதிவாதியும் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை விடுதலை செய்வதாக தனது உத்தரவை பிறப்பித்துள்ளார்.